பொய்யா மொழியைத் தோற்றிய மொழி
நாம் செய்யாத் தவத்தின் வரமிம் மொழி
தமிழில் பிறந்த தமிழா
நீ செய்வது எல்லாம் சரியா
தமிழ் மனைவி இருக்க
ஆங்கிலக் காதலி ஏன்
நா சுழன்றால் நாகரீகம் என்றால்
நா வறண்டால் என்ன செய்வாய்
வற்றும் நீரோடை தேடி
வற்றா ஊற்றை அழிக்காதே
ஆங்கில உலகம் தேடித்
தமிழை மறக்காதே
கல்லின் பின் தோன்றிய
மண்ணின் முன் தோன்றிய
மூத்த குடியே - எம் தமிழே
போற்ற வேண்டாம்
தூற்றாமல் காப்போம்.
No comments:
Post a Comment